விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும் ஒரு விவாத பேச்சு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிப்பார்கள். இந்நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டுச்செல்வார் தொகுப்பாளர் கோபிநாத்.
வீடு, அலுவலகம், நாடு , கணவன் மனைவி, மாமியார் மருமகள், பெற்றோர்கள் பிள்ளைகள், சினிமா , சினிமா கலைஞர்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது மனைவிமார்கள் மற்றும், கணவன் மார்களை வைத்து அவரவர் பொறுப்புகளையும், கஷ்டங்களை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டது.
அதில் ஒரு தம்பதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்கள். மனைவியின் பிரசவ வலியை பார்த்து மிகுந்த வேதனைக்குள்ளான அவரின் கணவர் பிறந்த குழந்தையை எப்போதும் கணவரே மிகுந்த பொறுப்புடன் பார்த்துக்கொள்வாராம். இரவில் குழந்தை அழுதாள் கூட மனைவியை தொந்தரவு செய்யாமல் அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு தன் தோல் மீது சாய்த்துக்கொண்டு இரவு முழுக்க கூட பார்த்துக்கொள்வாராம்.
இப்படி மனைவிக்கு கஷ்டமாக இருக்கும் என கணவரும், கணவருக்கு கஷ்டமாக இருக்கும் என மனைவியும் மாறி மாறி அன்பு செலுத்திக்கொள்ளும் அந்த தம்பதிகளை பார்த்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் மட்டும் அல்லாமல் மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விட்டார்கள். இதோ அந்த வைரல் வீடியோ!
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.