வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹேண்ட்ஸம் ஹீரோவாக இளம் பெண்ககளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா. முரளியின் மூத்த மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடிக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அழகு… நல்ல தோற்றம்… இளமை என பெண்கள்களின் பேவரைட் ஹீரோ லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி , இரும்புக் குதிரை, சண்டி வீரன், ஈட்டி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாதே, செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மக்கள் மனதில் பிரபலமான நடிகராக இடம்பிடித்திருக்கும் அதர்வாவை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் விமர்சித்து பேசியிருக்கிறார். அதில் அதர்வா நடிச்சு எந்த படம் ஹிட் ஆச்சு சொல்லுங்க? என கேட்டதோடு அதர்வா யாருகிட்ட கதை கேட்குறாரு? எந்த இயக்குனரை மதித்து அவர் கதை கேட்கிறார்?
ஒரு சம்பவம் சொல்றேன்… கொரோனாவுக்கு முன்னர் அதர்வா ஒரு படத்தில் கமிட் ஆகிறார். இதனிடையே லாக் டவுன் போட்டுவிடுகிறார்கள். பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியபோது அதர்வா உடல் எடை கூடி இருப்பதை பார்த்து இயக்குனர் உடை எடை குறைக்க சொல்லி சொல்கிறார். அதை அதர்வா தன்மான பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தனது மேலாளரை வைத்து இயக்குனரையே மிரட்டினார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதைக்கேட்ட நெட்டிசன்ஸ், உருட்டு உருட்டு நல்லா உருட்டு! அடுத்த சவுக்கு ஆவதற்கு நீயும் என்னென்னமோ கதை சொல்ற… அதெல்லாம் வேளைக்கு ஆகாது. அதர்வா நடிச்சு எந்த படம் ஹிட் ஆச்சா? முப்பொழுதும் உன் கற்பனைகள் 100 நாள் ஓடுச்சு, பரதேசி படத்திற்கு அதர்வா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியிருக்காரு… இமைக்கா நொடிகள் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிச்சுது… இது எதுவுமே தெரியாமல் எதையாச்சும் வந்து உளறாதே என நெட்டிசன்ஸ் விமர்சித்துத்தள்ளியுள்ளனர்.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.