சின்னத்திரையில் சீரியல் நடிகைகளைப் போலவே செய்திவாசிப்பாளர்களும் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக மாறியவர் கண்மணி சேகர். இந்த நிலையில் தற்போது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்த நவீனை திருமணம் செய்து கொண்டார்.
‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நவீன். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கண்மணியுடன் திருமணம் என்ற தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தார். அதற்குள் இணையத்தில் இது காதல் திருமணம் என்ற தகவல் பரவியது. ஆனால் இது பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று நவீனும் கண்மணியும் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து இவர்களின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் நவீன் – கண்மணி திருமணம் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் ஆசியுடன் நடைபெற்றது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு நவீன் – கண்மணி ஜோடியை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.