சின்னத்திரையில் சீரியல் நடிகைகளைப் போலவே செய்திவாசிப்பாளர்களும் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக மாறியவர் கண்மணி சேகர். இந்த நிலையில் தற்போது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்த நவீனை திருமணம் செய்து கொண்டார்.
‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நவீன். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கண்மணியுடன் திருமணம் என்ற தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தார். அதற்குள் இணையத்தில் இது காதல் திருமணம் என்ற தகவல் பரவியது. ஆனால் இது பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று நவீனும் கண்மணியும் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து இவர்களின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் நவீன் – கண்மணி திருமணம் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் ஆசியுடன் நடைபெற்றது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு நவீன் – கண்மணி ஜோடியை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.