சினிமா / TV

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூட்யூபர் இர்ஃபான்? ஒரு மனுஷன் எத்தனை சர்ச்சைலதான் சிக்குவாரு?

ஆபரேஷன் சிந்தூர்

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்தது இந்திய இராணுவம். அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க இரு நாட்டு எல்லைகளுக்கிடையே போர் மேகம் சூழ்ந்தது. 

அதன் பின் சில நாட்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த போரில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 12 யூட்யூபர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூட்யூபரின் டைரிக்குறிப்புகளை கைப்பற்றியது போலீஸார்.

அந்த டைரியின் மூலம் இவர் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல யூட்யூபர்கள் மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளுவன்சர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இர்ஃபான் உளவு பார்த்தாரா?

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த யூட்யூபர் இர்ஃபான் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக பேச்சுக்கள் அடிபடுகிறதாம். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளிவரவில்லை. ஆனால் இச்செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவ பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட இர்ஃபான், அதனை தொடர்ந்து ரமலான் பண்டிகை அன்று சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பணமும் உடையும் அளித்தபோது ஏற்பட்ட தகராறில் அவர்களை மோசமாக பேசியது சர்ச்சைக்குள்ளானது. இவ்வாறு பல சர்ச்சைக்குள் சிக்கி வரும் இர்ஃபான், தற்போது பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

முதலமைச்சர் டெல்லி செல்வது ஏன்? எல்லாமே அதுக்காகத்தான்.. பரபரப்பை கிளப்பிய வானதி சீனிவாசன்!

ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு கோவை விமான நிலையம் வந்தடைந்த பாரதிய…

1 hour ago

திரிஷாவுக்கு ஜோடி கமலா? சிம்புவா? பலரின் சந்தேகத்தை கிளியர் செய்த தக் லைஃப் படக்குழு?

எகிறும் எதிர்பார்ப்பு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

1 hour ago

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலில் வந்த குறியீடு!!

கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்…

2 hours ago

அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் இந்த நடிகர்கள்தான்? ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள்!

அமலாக்கத்துறை ரெய்டு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது Dawn Pictures என்ற நிறுவனத்தின் மூலம் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின்…

2 hours ago

“தம்பி” அடித்த கொள்ளையில் உங்க குடும்பத்திற்கும் பங்கு இருக்கோ? CM ஸ்டாலின் மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி டெல்லி செல்கிறார். இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

3 hours ago

ஒவ்வொரு மாதமும் 40 லட்சம் வேணும்! நீதிமன்ற படி ஏறிய ஆர்த்தி?

ஆர்த்தி-ரவி மோகன் பிரிவு ரவி மோகனும் ஆர்த்தியும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது.…

4 hours ago

This website uses cookies.