வரலட்சுமி கொடுத்து வச்சவங்க தான்.. கல்யாணத்துக்கு முன்னாடியே சர்ப்ரைஸ் கொடுத்த வருங்கால கணவர்..!

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர், வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால், அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது, இவர்களின் புகைப்படம் வைரலானது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக் கூடியவர். இவரது, குணம் தான் வரலட்சுமிக்கும், இவரை நாம் ஆண் என்று அழைக்கலாம். இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமி வீட்டுக்கு வருவார். அப்படி வரும்போது யாராவது சீண்டினால், அவ்வளவுதான் நடுரோடு என்று கூட பார்க்காமல் சண்டையிடுவார்.

மிகவும் தைரியமான பெண் இவர். வரலட்சுமிக்கு திருமணம் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அவருக்கு வயது 38 திருமணம் செய்து கொள்ள போகும் நிக்கோலாயிற்கு வயது 41 அவரது அப்பா நடத்தி வந்த தொழிலை தான் இவர் தற்போது செய்து வருகிறார். இவருக்கும், கவிதா என்ற கலிபோர்னியா நாட்டு அழகிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவருக்கு 15 வயதில் மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இவருக்கு இரண்டாம் திருமணம் ஆகும். சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியா இது? அழகிய ஃபேமிலி போட்டோ இதோ..!

இதனைப் பார்த்து ரசிகர்கள் என்னடா பதினோரு வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க கல்யாணம் ஆகி பொண்ணுக்கு வயசு 15 ன்னு சொல்றீங்க எல்லா கணக்குமே இங்கு இடிக்குதே என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

43 வயதானவரை இரண்டாம் திருமணம் செய்வது ஏன் என்ற கேள்வி வரலட்சுமி சரத்குமாரிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவு ஒன்றை பதிவிட்டதும் அந்த செய்தி அப்படியே அமைதியானது.

மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது வருங்கால கணவருடன் வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்று இருந்தார். அவர் தாய்லாந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலானது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி என் அப்பா கூட தான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர், அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நிக்கை மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன். அவர் என் பார்வையில் அழகானவர். எங்களைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு வருபவர்கள் பற்றி நான் கவலைப்பட போவதில்லை. அவர்களுக்கு நான் எதற்காக பதில் சொல்ல வேண்டும் என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், வருங்கால மனைவி வரலட்சுமிக்கு நிக்கோலாய் மும்பையில் இவரின் பெயரில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Poorni

Recent Posts

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

19 minutes ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

1 hour ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

1 hour ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

2 hours ago

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

2 hours ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

18 hours ago

This website uses cookies.