இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
கடந்த வாரம் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிகப்பு கொடி காண்பித்து மாயா மற்றும் அவருடன் இருந்த ஒரு சில பெண் போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வினுஷாவின் உடல் குறித்து நிக்சன் விமர்சித்து இருப்பதற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நிக்சனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது Body shaming, Sexist மனநிலையில் உச்சக்கட்டம் எனவும், இதனால் தான் வினுஷாவை இவர்கள் மோசமாக நடத்துகிறார்களா? கமல் ஹாசன் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” என சனம் ஷெட்டி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப் பண்ணதை கூட மன்னிச்சிடுவேன். ஆனால், இதனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா அப்படினு பேசிட்டு, பாடி ஷேமிங் பண்ணி இருக்கான். எனக்கு வெளியே வந்ததும் அதிர்ச்சியை தான் ஏற்படுகிறது என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் பேசிய வார்த்தைகளை டிவியில் ஒளிபரப்பு செய்து, இதற்கான விளக்கத்தை அவரின் முன்னிலையில் கூற வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சன் குறித்து தவறான வகையில் பேசிய தன்னுடைய விளக்கத்தை கூறுகிறார். அதே போல், ஜோவிகா தினேஷ் குறித்து பேசிய வார்த்தை ஐசு, மாயா குறித்து பேசிய வார்த்தை என அனைவருக்கும் செக் வைத்துள்ளார் பிக் பாஸ். இதனால், கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று சொல்லலாம்.
.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.