சினிமா / TV

தலையில் துண்டை போட்ட அட்லீ.. கும்பிடு போட்டு தப்பிய நிறுவனம்!

இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்தார். ராஜா ராணி படம் மூலம் எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ச்சியாக விஜயை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களை அளித்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தார். இதனால் தமிழ் சினிமா இவரை கொண்டாடியது. உடனே தனது ரூட்டை மாற்றிய அட்லீ, பாலிவுட்டுக்கு சென்றார்

இதையும் படியுங்க : ரஜினிக்கு மனைவியா நடிக்க வாங்க…பிரபல நடிகையிடம் மர்ம நபர் மோசடி.!

பாலிவுட்டில் நுழைந்ததும் முதல் படம் ஷாருக்கானை வைத்து இயக்கினார். ஜவான் படம் அங்கு பயங்கர ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், உலகளவில் ₹1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

இதனால் பாலிவுட்டும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. இதையடுத்து தமிழில் வெற்றியடைந்த தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். பேபி ஜான் என்ற பெயரில் படத்தை அட்லீ தயாரிக்க, அவரது உதவி இயக்குநர் படத்தை இயக்கினார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ நடித்த அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் பயங்கர நஷ்டம் அடைந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனிடையே அடுத்தடுத்து படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார் அட்லீ. அடுத்த படத்தை அல்லு அர்ஜூனை வைத்து இயக்க முடிவெடுத்தார்.

அதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் இந்த படத்தை ஒப்புக்கொண்ட சன் பிக்சர்ஸ், அட்லீயின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்து போனதாம். அதாவது 55 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என அட்லீ கூறியுள்ளார்.

இதனால் பின் வாங்கிய சன் பிக்சர்ஸ். தொடர்ந்து படத்தை எடுக்க தில் ராஜூவிடம் பேசியுள்ளார் அட்லீ, அவரோ கேம் சேஞ்சர் படத்தால் கடும் நஷ்டமடைந்ததாக கூறி விலகினார்.

இதனிடையே அட்லீ சம்பளத்தை உயர்த்தியதற்கு காரணம் என்ன என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. பேபி ஜான் படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்ததால், அதை சரி செய்ய தனது சம்பளத்தை ஏற்றியுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.