கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பஞ்சுருளி என்ற நாட்டார் தெய்வத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டது.
காந்தாரா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திலும் ரிஷப் ஷெட்டியே நடித்து வருகிறார். “காந்தாரா” முதல் பாகத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியிருந்த நிலையில் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தையும் இவரே இயக்கி வருகிறார்.
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் மரணமடைந்தனர். முதலில் இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ராகேஷ் என்ற நடிகர் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து துணை நடிகர் கபில் என்பவர் சௌபர்ணிகா நதியில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இவ்வாறு இத்திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் இரண்டு பேர் மரணமடைந்த நிலையில் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்பட்டது. பஞ்சுருளி தெய்வத்தின் சாபமா? என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் பணியாற்றி வந்த மற்றொரு நடிகரும் உயிரிழந்துள்ளார். அதாவது கேரளாவைச் சேர்ந்த விஜூ என்ற நடிகர் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக கர்நாடகாவின் தீர்த்தஹல்லியில் ஆகும்பே என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தில் பணியாற்றிய இரண்டு பேரும் உயிரிழந்த நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளது ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.