சின்ன படங்களை எடுப்பதில் இருந்து ரிலீஸ் செய்து ஓடிடியில் விற்பது வரை சவாலாக இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள் மட்டும்தான் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில், 25வது படமாக உருவாகியுள்ள படம் கிங்ஸ்டன். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பா.ரஞ்சித், “ஜி.வி.பிரகாஷ் இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்தே பயங்கர நம்பிக்கையோடு படத்தைப் பற்றி பேசுவார். படத்துடைய விஷுவல்சையும் காட்டி இந்தப் படம் நிச்சயமா ஒர்க் ஆகும் என்று சொல்வார்.
பட்ஜெட்டை மீறி செலவு செய்கிறோம் என்கிற பயம் கூட இல்லாமல், ஃபர்ஸ்ட் டைம் இயக்குநருக்கு அவர் வாய்ப்பு கொடுத்தது முக்கியமான விஷயம். இன்றைய சூழலில் நம்பிக்கை என்பது ரொம்பவும் முக்கியம். இன்று நம்மிடம் பெரிய பொருளாதாரம் இல்லை. VFXல் சூப்பரா ஒரு படம் பண்ணுவது என்பது சவாலான விஷயம்.
அந்த சவாலை குறைவான பட்ஜெட்டில் இந்த டீம் செய்திருக்கிறார்கள். நாங்கள் எந்தப் படம் பற்றிப் பேசினாலும் கிங்ஸ்டன் படத்தைப் பற்றி ஜி.வி. பேசிக்கொண்டே இருப்பார். நீண்ட நாட்களாக படத்தை விற்பதற்கு முயற்சி செய்துகொண்டே இருந்தார். நிச்சயம் மக்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
ஏனென்றால், ட்ரெய்லர் அந்த அளவு நன்றாக உள்ளது. தமிழ் சினிமாவில் படம் எடுத்து, அதை ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய சவாலான நிலை. இந்த நேரத்தில் இது மாதிரியான கதையை நம்பி படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம்.
அதை அடைய போராடிக் கொண்டிருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு கதை அந்தளவிற்குச் சொல்ல வராது. பாடலுக்கான சூழ்நிலையும் அப்படித்தான். ஆனால், நாம சொல்ல வரும் விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்கிற ஒரு நல்ல டெக்னீஷியன் அவர். அதுபோல எனக்கு சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்து ஜி.வி.தான்.
இதையும் படிங்க: 7 முறை கருக்கலைப்பு செய்தேன் என்றால் அது சாதனையே.. சோளக்காட்டில் அப்படி.. சீமான் பரபரப்பு பேச்சு!
நான் அடுத்து இயக்கும் வேட்டுவம் படம் பற்றி அவரிடம் பேசிட்டு இருந்தேன். கதையை நான் சொல்லவேயில்லை. ஆனால், அதற்குள் அவர் மூன்று டியூன் தயார் செய்யும் அளவிற்குப் போய்விட்டார். சின்ன படங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன், டிராகன் படம். சின்ன படங்களை எடுப்பதில் இருந்து ரிலீஸ் செய்து ஓடிடியில் விற்பது வரை சவாலாக இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள் மட்டும்தான்” எனக் கூறினார்.
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
This website uses cookies.