சினிமா / TV

ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!

சூர்யா பட வில்லன்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பரேஷ் ராவல். இவர் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஆவார். அதுமட்டுமல்லாது இவர் பாஜகவைச் சேர்ந்தவர். முன்னாள் மக்களவை எம்.பி. ஆகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இவர் தனது காயத்தை குணப்படுத்த சிறுநீரை குடித்ததாக கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். 

இப்படி ஒரு வைத்தியமா?

ஒரு நாள் பரேஷ் ராவலின் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அப்போது பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் பரேஷ் ராவலை நலம் விசாரிக்க வந்தாராம். அப்போது அவர், “நீ தினமும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக உனது சிறுநீரை நீ அருந்து. உனக்கு எந்த உடல் நலப் பிரச்சனையும் வராது. இந்த காயமும் ஆறிவிடும்” என கூறினாராம். 

அவர் கூறியபடியே பவேஷ் ராவலும் தினமும் காலை எழுந்தவுடன் சிறுநீரை அருந்த துவங்கினாராம். சிறுநீர் அருந்தும்போது ஏற்படும் அருவருப்பை தவிர்க்க அதனை மதுபானம் போல நினைத்து அருந்தினாராம். கிட்டத்தட்ட 15 நாட்கள் அருந்திய பிறகு அதிசயமாக அவரது காயம் ஆறத்துவங்கிட்டதாம். இதனை பார்த்து மருத்துவர்களே ஆச்சரியப்பட்டுப்போனார்களாம். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் மருத்துவர்கள் பலரும் இந்த மருத்துவ முறை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது, இதனை யாரும் பின்பற்றவேண்டாம் என அறிவுரைக்கின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.