நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தனது உதவியாளரிடம் இருந்து நகை கிடைத்தால் நடிகர் பார்த்திபன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், அவ்வப்போது இலைமறை காயாக சில வார்த்தைகளைப் பேசி கவர்வது மட்டுமல்லாமல், சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்புக்கு உள்ளாவார். இந்த நிலையில், தனது அலுவலகத்தில் இருந்து 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக, நேற்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். எனவே, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பார்த்திபனின் உதவியாளர் ஒருவரிடம் இருந்து நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தான் கொடுத்த புகாரை பார்த்திபன் திரும்பப் பெற்று உள்ளார். இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை என புகார் அளித்து இருந்தார் பார்த்திபன். அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
தற்போது, பார்த்திபனின் இயக்கத்தில் டீன்ஸ் படம் வெளியானது. அதேநேரம், பொன்னியின் செல்வன் படத்தில் இறுதியாக பார்த்திபன் நடித்து இருந்தார். மேலும், அவ்வப்போது ஊடக மற்றும் சமூக வலைத்தளப் பேட்டிகளிலும் பார்த்திபன் கலந்து கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : தேவயானியை காரி துப்பிய சரத்குமார்…படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.