தெலுங்கு சினிமா உலகின் டாப் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த “வார் 2” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பேன் இந்திய நடிகராக உருமாறினார். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியம் ஒன்று ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பியூலா ரூபி என்ற பிரபல பெண் ஓவியர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் தான் வரைந்த ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியம் 1650 அமெரிக்கன் டாலருக்கு விற்பனையாகியுள்ளதாக மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பு படி ரூ.1,45,300 ஆகும்.
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பியூலா ரூபி, “என்னிடம் பேச வார்த்தைகளே இல்லை. எனது பென்சில் கலை ஒரு வரலாற்றையே உருவாக்கும் என நினைத்துப் பார்த்ததில்லை. இன்று எனது ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியம் இதுவரை விற்கப்பட்டதிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையான தெலுங்கு நடிகரின் ஓவியம் ஆகும்” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் பியூலா ரூபிக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.