நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி பயோபிக் படமாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியைப் படம் கொண்டிருப்பதால், சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, இன்று (நவ.15) அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், இந்த திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்று உள்ளனர்.
இதையும் படிங்க: எட்டி உடைத்த நடிகர்…. கதறி அழுத சினேகா – தனுஷ் படத்தில் இவ்வளவு கொடுமையா?
இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திரையரங்கின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.