தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மெலிந்து தங்க இடம் இல்லாமல், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு சிலர் தெரிவித்திருந்தனர். பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முன்னணி நடிகர்களான, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் சில தோல்வி படங்களையும் தயாரித்துள்ளார்.
‘என்னமா கண்ணு’, ‘லூட்டி’, ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’, ‘நாய்க்குட்டி’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக இவர் தயாரிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் – சூர்யா இணைந்து நடித்திருந்த ‘பிதாமகன்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அதையடுத்து கஜேந்திரா படத்தால் தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சர்க்கரை நோய் காரணமாக இரண்டு கால்களும் புண்கள் ஏற்பட்ட பரிதாப நிலையில் இருந்த இவரை, இவரின் நண்பர் ஒருவர் தான் சாலிகிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார்.
ஏற்கனவே இது குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு தெரியப்படுத்திய நிலையில், அவரின் உதவியால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி ஏ துரை, உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பின்னர் எழுந்து உட்காரும் அளவுக்கு தேறிய இவரால் நீரிழிவு நோயின் பாதிப்பின் காரணமாக கால் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு காலில் உள்ள சதை சிதைந்து, எலும்பு தெரியும் அளவிற்கு இருந்தார். எனவே இவரின் மேல் சிகிச்சைக்கு உதவி வேண்டும் என இவரின் நண்பர் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகியது.
பலருக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்து வந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு, பலர் உதவிக்கரம் நீட்ட முன் வந்தனர். நடிகர் சூர்யாஅவரின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கி உதவி செய்திருந்தார். இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வந்த அவர் நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்து இருக்கிறார். இந்த செய்தியை அறிந்து பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.