நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம்: ‘சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள்’… விளாசிய அரசியல் பிரபலம்..!

Author: Vignesh
12 October 2022, 12:45 pm
Nayanthara_updatenews360
Quick Share

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

nayanthara _updatenews360

விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி, நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் தம்பதி 4 மாதங்களில் தாயானது குறித்து விமர்சித்துள்ளார்.

krishnasamy_updatenews360

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில், தமிழ் சினிமாதனத்தால் தமிழ் இளைஞர்கள் சீர்கெடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம்.! திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின்.!

தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள் – கலாச்சாரம் – பண்பாடு’. என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 343

0

0