உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக ‘பொன்னியின் செல்வன்’.. என்னடா இது மெகாஹிட் படத்துக்கு வந்த சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 4:20 pm
PS - Updatenews360
Quick Share

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில், படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல முன்னணி சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அது ரசிகர்கள் உருவாக்கிய போலி ப்ரோமோ என்பது தெரியவந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ரியலாவே எடுத்து வெச்சுருக்காங்க, சிலர் உண்மை என்றும் நம்பி, பொங்கல் அன்று படத்தை திரையிடாமல், ஜனவரி 8ஆம் தேதி ஏன் ஒளிபரப்பு செய்கிறார்கள் என விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 805

0

6