சினிமா / TV

சூர்யாவுக்காக பூஜா ஹெக்டே எடுத்த முக்கிய முடிவு.. ரெட்ரோ அசத்தல் அப்டேட்!

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே தனது சொந்தக் குரலில் முதன்முறையாக டப்பிங் பேசவுள்ளார்.

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, கருணாகரன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தினை சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படம் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கவுள்ளன. மேலும், இப்படத்துக்காக முதல் முறையாக தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

பிராந்திய மொழி படங்களில் முதன்முறையாக ரெட்ரோ படத்துக்காகவே பூஜா இந்த முயற்சியை எடுத்துள்ளார். முன்பு, இந்தக் கதையைக் கேட்டவுடன், இதற்காக தமிழ் வசனங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இதனை மனதில் வைத்துதான் டப்பிங்கும் அவரே செய்யட்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும், அவர் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்திலும் பூஜா நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: உயிரைப் பறித்த ஆன்லைன் டயட் டிப்ஸ்.. கேரளா பெண்ணுக்கு சோகம்!

அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் பிரமாண்டமாக வெளியானது கங்குவா. ஆனால், இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே, 5 வருடங்களாக தியேட்டர் ஹிட் கொடுக்காத சூர்யா, ரெட்ரோவில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.