தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சீதா.
இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்று, சீரியல் நடிகர் தனுஷை திருமணம் செய்து அவர்களும் பிரிந்ததாக கூறப்படுகிறது.தற்போது இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த 2 1/2 சவரன் ஜிமிக்கி கம்மல் காணாமல் போய்விட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.தனக்கு நெருங்கியவர்கள் அல்லது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இவருடைய முன்னாள் கணவர் பார்த்திபன்,அவருடைய வீட்டில் திருட்டு போனதாக புகார் தெரிவித்து,பின்பு வீட்டில் வேலை செய்யும் நபர் தான் திருடியுள்ளார் என்று தெரிந்தவுடன் புகாரை வாபஸ் வாங்கினார்.அதை போல் நடிகை சீதா வீட்டிலும் நடந்திருக்கலாம் என போலீஸ்,முதற்கட்டமாக வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்து வருகின்றனர்.
நடிகை சீதா கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.