யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.
சில மாதங்களுக்கு முன்னர் இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள்.
அதையடுத்து இவர்களுக்கு அண்மையில் பிரம்மாண்டமாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் பென்ஸ் கார் மோதி பதமாவதி என்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது காரை ஓட்டி வந்தது இர்பானின் ட்ரைவர் அசாருதீன் என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து அசாருதீன் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து உண்மையில் காரை ஒட்டி வந்தது அசாருதீன் தானா? என சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, விபத்து நடந்த இடத்தில் இர்ஃபானை பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு வேலை கார் ஓட்டிவந்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு இர்பான் எஸ்கேப் ஆகிவிட்டாரா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது. இர்பானுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த கார் விபத்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.