தமிழ் சினிமாவில் சிக்கு புக்கு சிக்குபுக்கு ரயிலு என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டவர்.
பிரபுதேவா தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை சென்றவர். முதலில் 1955 ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறந்த நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ரமலத்தை விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து நயன்தாராவை காதலித்து வந்த பிரபுதேவா அந்த காதலும் கை கூட நிலையில், டாக்டர் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது 2 வது மனைவியை அவ்வளவாக மீடியா பக்கம் காட்டாத பிரபுதேவா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோ காலில் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள சூப்பரான செய்தி என்னவென்றால் பிரபுதேவாவிற்கு இரண்டாவது மனைவியுடன் பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்று பெரும் மகன்கள். அதேபோல் பிரபுதேவாவுக்கும் ரமலத்துடன் வாழ்ந்த போது பிறந்த மூன்று பேரும் மகன்கள் தான்.
பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஆண் வாரிசுகள்தான். எனவே சுந்தரம் மாஸ்டர் வம்சத்தில் முதன் முதலாகப் பிறந்த பெண் குழந்தை பிரபுதேவாவுக்கும் ஹிமானிக்கும் பிறந்திருக்கும் இந்தக் குழந்தைதான். எனவே மொத்த சுந்தரம் மாஸ்டர் குடும்பமும் மகிழ்ச்சியில் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறது.
இந்நிலையில் பிரபுதேவாவின் மகளுக்கு நயன்தாரா என்று பெயர் வைக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இந்த விஷயம் முற்றிலும் பொய் என்று பிரபுதேவாவின் நட்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.