தமிழ் சினிமாவில் சிக்கு புக்கு சிக்குபுக்கு ரயிலு என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டவர்.
பிரபுதேவா தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை சென்றவர். முதலில் 1955 ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறந்த நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ரமலத்தை விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து நயன்தாராவை காதலித்து வந்த பிரபுதேவா அந்த காதலும் கை கூட நிலையில், டாக்டர் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது 2 வது மனைவியை அவ்வளவாக மீடியா பக்கம் காட்டாத பிரபுதேவா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோ காலில் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள சூப்பரான செய்தி என்னவென்றால் பிரபுதேவாவிற்கு இரண்டாவது மனைவியுடன் பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்று பெரும் மகன்கள். அதேபோல் பிரபுதேவாவுக்கும் ரமலத்துடன் வாழ்ந்த போது பிறந்த மூன்று பேரும் மகன்கள் தான்.
பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஆண் வாரிசுகள்தான். எனவே சுந்தரம் மாஸ்டர் வம்சத்தில் முதன் முதலாகப் பிறந்த பெண் குழந்தை பிரபுதேவாவுக்கும் ஹிமானிக்கும் பிறந்திருக்கும் இந்தக் குழந்தைதான். எனவே மொத்த சுந்தரம் மாஸ்டர் குடும்பமும் மகிழ்ச்சியில் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.