தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை உண்டாக்கியவர் ரஜினிகாந்த். ஸ்டைல், நடிப்பு என மக்கள் மனதை கவர்ந்த ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என பட்டம் சூட்டி ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது தான் அண்ணாமலை. முதலில் அண்ணாமலை படத்தை எடுக்க முன்வந்த படக்குழு.. படத்தின் பெயரை அண்ணாமலைக்கு அரோகரா என்று தான் வைத்தனர்.
பின்னர் அதை மாற்றி, அண்ணாமலை என வைத்தனர். 1992ல் வெளியான இந்த படத்தில் குஷ்பு, மனோரமா, சரத்பாபு, ராதாரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
தேவா இசையமைப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியான இந்த படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.
தற்போது இந்த படத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வரும் முதல் பாடல், வந்தேன் டா பால்காரன், இந்த பாடலில் ரஜினிக்காக நடனத்தை அமைக்க பிரபுதேவாவே முன் வந்துள்ளார்.
அப்போதைய காலக்கட்டத்தில், பிரபு தேவா குரூப் டான்சராக தான் இருந்தார். மேலும் சில பாடல்களில் மட்டும் ஹீரோவாக தலைகாட்டினார்.
அவரது தந்தை சுந்தர், சகோதரர் ராஜுசுந்தரம் என நடனக் கலைஞர்கள் இருந்த போதும், தான் நடனத்தை அமைக்கிறேன் என பிரபுதேவா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.