போதும் போதும்… இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன்.. முடிச்சு விட்றாதீங்க: பதறிய ‘லவ் டுடே’ இயக்குனர்..! இது தான் காரணமா..?

Author: Vignesh
11 November 2022, 11:30 am
lovetoday-updatenews360
Quick Share

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ‘கலகத் தலைவன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது.

lovetoday-updatenews360

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மிஷ்கின், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேச வரும் போது மாஸ் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அளவிற்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.

இதனால் பதறிய பிரதீப் ரங்கநாதன், ‘ போதும் போதும். மாட்டி விட்றாதீங்க. இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன் என தனது பாணியில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு முதல்ல நன்றி. ‘லவ் டுடே’ படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைச்சு இருக்குறதுக்கு நீங்களும் ஒரு காரணம். படத்தை பார்த்துட்டு சார் எனக்கு கால் பண்ணி, நல்லா வந்து இருக்குறதா பாராட்டுனாரு. பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டேன்.

lovetoday-updatenews360

‘கலகத் தலைவன்’ டிரெய்லர் சூப்பரா வந்துருக்கு. மகிழ் திருமேனி சார் வொர்க்குக்கு நான் பெரிய பேன் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 329

0

0