“காவி நிறத்தில் பிகினி”… “பாகிஸ்தான் நிறத்தில் சட்டை” : சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன் -ஷாருக்கானுக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் நடிகர்..!

மும்பை: ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் ‘பெஷாராம் ரங்’ பாடல் வெளியாகி 21 மணி நேரத்தில் 17 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது.

இந்த படத்தில் தீபிகா படுகோன் கவர்ச்சி நடிகைகளை எல்லாம் தாண்டி அப்படியொரு குலுக்கல் நடனம் போட்டு சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், தீபிகா படுகோன் பதான் பாடலில் காவி பிகினியை அணிந்து கொண்டு ஆடியிருப்பது இந்து மக்களை அவமதிக்கும் செயல் என பாய்காட் பதான் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆபாச ஆட்டம்

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் ஹ்ரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள பதான் படத்தின் பெஷாராம் ரங் பாடல் நேற்று வெளியானது.

நடிகை தீபிகா படுகோன் அந்த பாடலில் பிகினி உடைகளில் ஆடியுள்ள கவர்ச்சி ஆட்டம் போட்டு ஆபாச நடிகைகள் ஆடுவதை போல இருப்பதாகவும், சாஃப்ட் பார்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

காவி பிகினி

நடிகை தீபிகா படுகோன் கவர்ச்சியை குறைத்து நடித்து வந்த நிலையில் மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு கெஹ்ரியான் படம் மூலமே திரும்பி விட்டார். ஷாருக்கானின் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பெஷாராம் பாடலில் அவர் காவி நிற பிகினியை அணிந்து கொண்டு கெட்ட ஆட்டம் போட்டிருப்பதை ஏகப்பட்ட இந்து அமைப்புகள் கண்டித்து வருகின்றன. பாய்காட் பாலிவுட் கேங் இந்த சர்ச்சையை தற்போது கையில் எடுத்து படத்தை தடை செய்ய வேண்டும் என கிளம்பி உள்ளது.

மத்த கலரு கண்ணுக்கு தெரியலையா

நடிகை தீபிகா படுகோன் பிகினி என்பதை தாண்டி வித விதமான ‘தாங்’ உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் நடனமாடி உள்ளார். நடிகை தீபிகா படுகோன் தங்க நிறம், மஞ்சள் நிறம், நீல நிறம் என பல வண்ணங்களில் பிகினி அணிந்து இந்த பாடலுக்கு நடனமாடி உள்ள நிலையில், திட்டமிட்டே ஷாருக்கான் படம் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்க ‘காவி’ சர்ச்சையை கிளப்புகின்றனர் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இந்த பாடல் அமைந்துள்ளது என்றும் பெஷாராம் என பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பது இந்து மதக் கடவுளை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவியும் பச்சையும்

தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்து கவர்ச்சி ஆட்டம் போட அவருடன் படு நெருக்கமாக பச்சை நிற ஷர்ட் அணிந்து ஷாருக்கான் ஆடியிருப்பது மறைமுகமாக பாகிஸ்தான் கலரை அவர் குறியீடாக வெளிக்காட்டுகிறார் என பாய்காட் கேங் பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளது.

சிக்கலில் ஷாருக்கான்

பாய்காட் கேங் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படம் தியேட்டர்களில் ஓடவே இல்லை. இதே நிலைமை வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்திற்கு நிலவுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, மேலும், சிலர் இந்த பாடலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தீபிகா படுகோனுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்விட்டர் பதிவில், காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை வன்புணர்வு செய்யலாம், அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கலாம், ஆனால் காவி நிறத்தில் உடை அணிந்து நடிப்பது மட்டும் தவறா என்பது போல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, தீபிகா படுகோனுக்கு தன்னுடைய ஆதரவை பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு, சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சிலர் தங்களின் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

தீபிகா படுகோனின் காவி உடை பிரச்சனை ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் நடிகர் ஒருவர் இவருக்கு ஆதரவாக பேசியுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.