வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் 17 வயதில் ஹீரோவாக களமிறங்கியவர் நடிகர் பிரசாந்த். இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தார். காதல் படங்களே நடித்து வந்த பிரசாந்த் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்தார். செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, அப்பு அவரது நடிப்பில் வெளியான படங்கள் இப்போதும் ஹிட்டாக ஓடும்.
இவருக்கு 2005ம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற நீதிமன்றம் சென்றார் பிரசாந்த்.
காரணம் 1998ம் ஆண்டே கிரஹலட்சுமிக்கு வேணு கோபால் என்பவருடன் திருமணம் நடத்திருப்பதை மறைத்துள்ளார்கள். இந்த பிரச்சனைகளுக்கு படங்களை நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரசாந்த் கடந்த சில வருடங்களாக தான் நடிக்க தொடங்கியுள்ளார்.இந்த நிலையில் பிரசாந்த் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நிச்சயதார்த்தம் என்கின்றனர் ஆனால் பெண் யார், எப்போது திருமணம் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
This website uses cookies.