சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்றுது. தற்ப்போது இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி ஷங்கர்… நான் ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்யப்போன இடத்தில் ஒரு பையனை ஒரு வருஷமாக சைட் அடித்தேன். ஆனால், நான் அவருடன் பேசியதில்லை. அவரும் என்னுடன் பேசியதில்லை. அவர் மீது எனக்கு ஒரு கிரஷ் அவ்வளவு தான். அதன் பிறகு நான் வேறொரு ஜிம்மில் சேர்ந்துவிட்டேன். என கூறினார். இதை கேட்டதும் ரசிகர்கள் 10 வருஷமாக காதலன் கூடவே இருக்கும்போதே இப்படி அடுத்தவனை ஒரு வருஷமா சைட் அடிச்சிருக்கீங்களே இது நியாமா? என விமர்சித்துள்ளனர்.
கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, இவருக்கு ரூ. 6 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரிடம், ரூ. 61 லட்சம் மதிப்புள்ள BMW X1 மற்றும் ஒரு condo கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக நடித்த ருத்ரன் திரைப்படத்திற்கு ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.