மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிளாமர் ரோலில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் கிளாமராக நடித்து விட்டால் சீக்கிரமே பெரிய ஹீரோயின் ஆக மாறிவிடலாம் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி நடிப்பது தான் உண்மையிலேயே ரொம்பவே கஷ்டம் .
சினிமாவில் கிளாமராக நடிப்பது தான் உண்மையிலே கஷ்டம். கிளாமர் ரோல் நடிக்கும் அளவுக்கு நான் இல்லை என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு திறமையோ தைரியமோ கிடையாது. இப்போது நடிப்பதே எனக்கு வசதியாக இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் என்னுடைய ரசிகர்களுக்கும் என்னை கிளாமராக பார்க்க விரும்பவில்லை என நினைக்கிறேன். என்னுடைய வழக்கமான நடிப்பை தான் அவர்களும் விரும்புகிறார்கள் எனவே நான் எப்போதும் போலவே இது போன்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பேன் என பிரியா பவானி ஷங்கர் கூறினார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.