சினிமா / TV

அப்படி நடிப்பது ரொம்ப கஷ்டம்…. அவங்களுக்கு அது பிடிக்காது – பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்!

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிளாமர் ரோலில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் கிளாமராக நடித்து விட்டால் சீக்கிரமே பெரிய ஹீரோயின் ஆக மாறிவிடலாம் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி நடிப்பது தான் உண்மையிலேயே ரொம்பவே கஷ்டம் .

சினிமாவில் கிளாமராக நடிப்பது தான் உண்மையிலே கஷ்டம். கிளாமர் ரோல் நடிக்கும் அளவுக்கு நான் இல்லை என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு திறமையோ தைரியமோ கிடையாது. இப்போது நடிப்பதே எனக்கு வசதியாக இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் என்னுடைய ரசிகர்களுக்கும் என்னை கிளாமராக பார்க்க விரும்பவில்லை என நினைக்கிறேன். என்னுடைய வழக்கமான நடிப்பை தான் அவர்களும் விரும்புகிறார்கள் எனவே நான் எப்போதும் போலவே இது போன்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பேன் என பிரியா பவானி ஷங்கர் கூறினார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.