பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அட்லீயின் வாழ்க்கை மனைவி பிரியா வந்த பிறகு தான் முற்றிலுமாக மாறியதாக கூறப்படுகிறது. சென்னையில் பிறந்த பிரியாவுக்கு மீடியா மீது ஆசை வர கல்லூரி படிக்கும்போதே கனா காணும் காலங்கள் சீரியலில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு குறும்படங்களில் நடித்து பின்னர் நடன நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு நடிகையாக முயற்சித்தார் பிரியா.
அதன் பின்னர் நான் மகான் அல்ல, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார் ஆனால் அதன் மூலம் பிரபலம் ஆகவில்லை. சிவகார்த்திகேயன் மூலம் அட்லீயின் ப்ரண்ட்ஷிப் கிடைக்க பின்னர் காதலாக மாறியது. ராஜா ராணி ரிலீசுக்கு பிறகு ப்ரோபோஸ் செய்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது பிரியா அட்லீக்கு சிறந்த மனைவியாக அவரது வளர்ச்சிக்கு ஊக்கமளித்து சப்போர்ட்டாக இருந்து வருகிறார். இப்படி ஒரு மனைவி அமைய அட்லீ கொடுத்து வச்சியிருக்கணும் என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர் .
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.