கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார்.
மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!
இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது .
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். அண்மையில் கோடா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது நடிகர், நடிகைகளை பொதுவெளியில் (Airport , ஜிம் , ஹோட்டல் ) உள்ளிட்ட இடங்களில் மடக்கி பிடித்து புகைப்படம் எடுக்கும் பத்திரிகையாளர்கள் அதை வைத்து பல லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் புகைப்படம் எடுக்கும் அந்த நபர்களுக்கு அவர்களது நிறுவனம் சார்பில் ஸ்பெஷல் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால் சில செலபிரிட்டிகள் தாங்களாகவே பணம் கொடுத்து விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். இதை பற்றி நான் கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன் என பிரியாமணி கூறியிருக்கிறார்.
நடிகை பிரியாமணி தற்போது மைதான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில், அஜய் தேவகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு, வந்தவர்கள் எல்லோரும் போனி கபூருடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்படி அவர் பிரியாமணி உடன் நிற்கும்போது தனக்கு அருகில் அணைத்து பிடித்துக்கொண்டார். இதனால் பிரியாமணி சங்கடத்துடன் தான் நின்று இருந்தார். அந்த வீடியோவை பலரும் விமர்சித்து வருகின்றன.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.