சினிமா / TV

உங்க வாய் உங்க உருட்டு- பிரியங்கா தேஷ்பாண்டேவின் புகைப்படத்தால் பரபரப்புக்குள்ளான நெட்டிசன்ஸ்!

திடீர் திருமணம்

விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் 2016 ஆம் ஆண்டு பிரவின் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2022 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜே வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. 

சுற்றி வளைத்த விமர்சனங்கள்

திடீரென இவர் திருமணம் செய்துகொண்ட செய்தி வெளியான நிலையில் பலரும் பலவிதமாக பேசத்தொடங்கினர். பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டதாகவும் இதனால்தான் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமனவரை அவசரமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வலைத்தளங்களில் பல செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. 

உங்க வாய் உங்க உருட்டு

தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு டீசர்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. அந்த டீசர்ட்டில் “உங்க வாய் உங்க உருட்டு” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படத்தை பதிவிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே அதில் கேப்ஷனாக, “பேசலைனா Peace, பேசினா Piece, T-Shirt did the damage” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அந்த புகைப்படத்தில் அவர் தனது வாயை மூடியபடி போஸ் கொடுத்துள்ளார். தன்னை குறித்து வதந்தி பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் இப்புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார் என நெட்டிசன்கள் டீகோட் செய்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.