டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அழகான, பவ்யமான தோற்றம் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகனின் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெகுசில நாட்களிலேயே அவரின் அழகை பார்த்து கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன் பின்னர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்து சிறப்பாக நடிக்க கற்றுக்கொண்டார்.
பின்னர் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், டிக் டாக் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். டிக் டாக் படத்தில் நடிகை பிரியங்கா மோகன், Bed ரூம் சீன் மற்றும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி நம்ம பிரியங்கா மோகனா இது என கேட்டு வருகிறார்கள்.
டிக் டாக் பட குழுவினர் பிரஸ்மீட் வைத்து ஒரு புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். இயக்குனரும், ஹீரோவும் படத்தினை தியேட்டரில் பார்த்தபோது 20 நிமிட போர்ஷனை காணாமல் போனதாக கூறியிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக பிரியங்கா மோகனின் சில காட்சிகள் தான் மிஸ்ஸிங் என்று கூறப்படுகிறது. அதன்பின், ஒரே நாளில் அந்த காட்சிகளை மீண்டும் எடுத்து படத்தில் இணைத்து படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பிரியங்கா மோகன் தான் மறைமுகமாக இந்த வேலையை செய்தார் என்று சிலர் கூறிவந்த நிலையில், பட குழுவினர் பிரியங்கா மோகன் காரணம் என்று நாங்கள் கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
This website uses cookies.