விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலனவை மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுப்பாளராக இருப்பார்கள். இவர்கள் செய்யும் நையாண்டி, அட்ராசிட்டிஸ்களுக்கு பார்வையாளர்கள் பக்கம் வரவேற்பு ஜாஸ்தி.
அப்படி இவர்கள் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்க நிகழ்ச்சி பயங்கர ஹிட் என்றே சொல்லாம். மக்களை அதிகளவில் கவரக்கூடிய வகையில் இவர்களது நிகழ்ச்சி எடுத்துக்கொண்டு செல்லும். ஜூனியர் மற்றும் சீனியர் என நடக்கும் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஜூனியர் சீசன் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர் மனோ, பாடகி சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருந்து வருகின்றனர்.
இதை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது திருமணம் காரணமாக தற்காலிகமாக பிரேக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா.
இது குறித்து விஜய் டிவி ப்ரோமோவையே வெளியிட்டுள்ளது. அதில் லட்சுமி பிரியாவும் மாகாபாவுடன் இணைந்து நடத்தியுள்ளார். மகாநதி சீரியல் மூலம் பிரபலமான லட்சுமி பிரியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவியை பிரபல சேனலான கலர்ஸ் நிறுவனம் வாங்குவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியங்காவுக்கு இது தற்காலிகமான பிரேக்கா அல்லது நீக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலால் ஒட்டுமொத்தமாக வெளியேறுகிறாரா என்பது போகபோகத்தான் தெரியும்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.