‘மாமா பயலே.. பெட்ரூம் பத்தி பேசும் எச்சப்பயலே’.. மேடையில் மோதிக்கொண்ட பயில்வான்-தயாரிப்பாளர் கே.ராஜன்..!

Author: Vignesh
14 December 2022, 10:28 am
rajan vs bayilvan ranganathan - updatenews360
Quick Share

சென்னை : கட்சிக்காரன் இசைவெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் கே ராஜனும், பயில்வான் ரங்கநாதனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். காமெடி நடிகராகவும், சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதனுக்கு படவாய்ப்பு குறைந்ததை அடுத்து சொந்தமாக யூட்யூப் சேனலை ஆரம்பித்தார். அந்த சேனலில் நடிகை, நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து அப்பட்டமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

கட்சிக்காரன் இசைவெளியீட்டுவிழா

k rajan_updatenews360

இந்நிலையில், கட்சிக்காரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜன் கலந்துகொண்டு பேசிக்கொண்டு பேசினார். அப்போது, அவருக்கு பட்டு சால்வை போர்த்தப்பட்ட போது, இந்த பட்டு சால்வையில் வியர்வையைக்கூட துடைக்க முடியாது. இதனால், காதிக்கிராஃப்டில் சால்வை வாங்குங்கள், நம்மக்களை வாழ வையுங்கள் என்றும், இந்திய இப்போது வல்லரசாகிவிட்டது, எதற்கு எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டவேண்டிய இருப்பதாக பேசிக்கொண்டு இருந்தார்.

கேள்வி கேட்ட பயில்வான் ரங்கநாதன்

bayilvan ranganathan -updatenews360-1

அப்போது, அங்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பயில்வான் ரங்கநாதன் அமர்ந்து கொண்டிருந்த போது, நீங்கள் ஜிஎஸ்டியை பற்றி பேசி தயாரிப்பாளர் வீட்டிற்கு ரெய்டு வரவைத்துடுவீர்கள் போல கிண்டலாக தெரிவித்தார். இதற்கு ஆரம்பத்தில் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார் ராஜன்.

ஒரு கட்டத்தில் என்னைப் பற்றி ஏன் மேடையில் பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் பயில்வான். போடா மாமா பயலே இது இசைவெளியீட்டு விழா உனக்கு என்னால் இங்கு பதில் சொல்ல முடியாது தனியாக பிரஸ் மீட்வைத்து பேசிக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் எவ்வளவோ கூறிய போதும், பயில்வான் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருந்தார்.

bailwan -updatenews360-1

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவருமே வாடா போடா என்று ஒருமையில் பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ராஜன், போடா மாமா பயலே, பெண்கைளை பற்றி தரக்குறைவாக பேசுற, எப்போதும் பெட்ரூம் பத்தி பேசும் எச்சப்பயலே என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக சாடினார்.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து அதே வேலை திரைப்பிரபலங்கள் பற்றி அசிங்கமாக, தரக்குறைவாக பேசி வரும் நிலையில், இது குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே ராஜன் ஏற்கனவே புகார் அளித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.

rajan vs bayilvan ranganathan - updatenews360

இவர் மட்டுமில்லாமல் இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் பீச்சில் இவரை பார்த்ததும அடிக்க பாய்ந்தார். யார் என்ன பேசினாலும்,புகார் கொடுத்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயில்வான் தொடர்ந்து நடிகைகளை பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

Views: - 848

1

0