பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன். எந்த சமரசமும் இல்லாமல் பெரிய நடிகர்கள் நடிகைகள் என அனைவரையும் விளாசி வருகிறார். குறிப்பாக நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு அவர்களால் வளர்ந்த நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
அவருடைய பேச்சு பலமுறை சர்ச்சையாகவும் முடிந்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஆகவேண்டுமா? இந்த நிலையை தயாரிப்பாளராக நீங்கள் மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கே ராஜன், வேறு வழியே இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார். அந்த கரைக்கு போக வேண்டும் என்றால், நடுவில் இருக்கும் சேரை மிதித்துதான் போக வேண்டும். அதேபோல் சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
திறமைக்கெல்லாம் இங்கு மதிப்பில்லை, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்றால் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் சில நடிகைகள் கறாராக உள்ளனர். அதுவும் தமிழ் நடிகைகள் ஸ்ட்ரிடிக்ட்டாக உள்ளனர். வேறு மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் அதற்கு சம்மதித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்கள் எல்லாம் பாவம் என்ற அவர், அனுபவிப்பது ஒன்று நடிகர்கள் அல்லது இயக்குநர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பல சமயங்களில் விபச்சாரிகள், சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். நடிகைகளின் நடிப்பை யார் பார்த்தா? கவர்ச்சியான விஷயத்திற்கு தான் நடிகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கவர்ச்சி என்பது உடம்பை கட்டுவது தான் என்றும், இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டினால், அதற்கான காசை நடிகைகள் பெறுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, கே.ராஜன் பேசுகையில், நடிகைகள் அறிமுகமாகும் போது மேக் அப் போட இருக்கும் மேக் மேனே காலி பண்னிவிடுவான். மேக்அப் மேன்னிடம் சென்ற உடனே உன் உடம்பு முழுசா பார்க்கணும், அப்போ தான் என்ன உடை மற்றும் மேக் அப் போடுவது என பார்க்க முடியது என்றும், இது எல்லாமே சினிமா துறையில் இருக்கும் விஷயம் தான். இருக்கும் கொஞ்ச காலத்தில் சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்துவிட்டுச் சென்று விட வேண்டும் என்று கூறியுள்ளார். மூத்த தயாரிப்பாளரான கே ராஜனின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.