சினிமா / TV

எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?

சுமாரான நடிகர்

நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை விமர்சிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அது மட்டுமல்லாது தொடக்க காலகட்டத்தில் பல சுமாரான திரைப்படங்களில் சூர்யா நடித்திருந்தார். அந்த வகையில் அவர் நடித்த மிகவும் சுமாரான திரைப்படம்தான் “உயிரிலே கலந்தது”. 

இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை கே.ஆர்.ஜெயா என்பவர் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராதிகா, சிவக்குமார், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தொலைக்காட்சிகளில் இப்போதும் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இக்கால ரசிகர்கள் இத்திரைப்படத்தை ரசித்து பார்த்தாலும் இத்திரைப்படம் வெளிவந்தபோது பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.

எல்லாமே போச்சு

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான Mutham சிவகுமார் இத்திரைப்படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை குறித்து மிகவும் மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டார். அதாவது இத்திரைப்படத்தின் தோல்வியால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிட்டதாம். 

அவரது மனைவியின் நகைகளை விற்று பிழைப்பு நடத்தினாராம். அது மட்டுமல்லாது எங்காவது வேலை கிடைக்கும் என்று பல இடங்களில் முயன்றுபார்த்தும் வேலை எதுவும் கிடைக்கவில்லையாம். அதன் பிறகு வாழ்க்கையே போராட்டமாகிவிட்டதாம். எனினும் ஒரு கட்டத்திற்கு பிறகு நிலைமை ஓரளவு சரியானதாம். இவ்வாறு தான் பட்ட கஷ்டத்தை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் Mutham சிவகுமார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.