“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் பல நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற நவம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அஜித்குமார்-ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தை ஐசரி கணேஷ் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் ஐசரி கணேஷ் அந்த பிராஜெக்ட்டில் இருந்து தற்போது விலகிவிட்டாராம். அதனை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் இந்த புராஜெக்ட் சென்றுள்ளது. ஆனால் எவரும் இத்திரைப்படத்தை தயாரிக்க முன்வரவில்லையாம்.
இவ்வாறு எந்த தயாரிப்பாளரும் முன்வராததற்கு காரணம் அஜித்குமார் போடும் நிபந்தனைகள்தான் என கூறப்படுகிறதாம். அதாவது அஜித்குமார் ரூ.180 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதில் 50 சதவீதத்தை முன்பணமாக கேட்கிறாராம். மேலும் மீதி பணத்தை எதிர்கால தேதியிட்ட காசோலை (Post Dated Cheque) ஆக முன்கூட்டியே தரவேண்டும் என கூறுகிறாராம். அதே போல் இந்த மொத்த பணத்தையும் படப்பிடிப்பு நடைபெறும்போதே தந்துவிட வேண்டும் எனவும் நிபந்தனை போடுகிறாராம். இந்த நிபந்தனைகளால்தான் தயாரிப்பாளர்கள் பின் வாங்குவதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று…
This website uses cookies.