பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல், இந்திய சினிமாவின் மிக பிரமாண்ட திரைப்படங்களில் ஒன்றாக,நாளை சுமார் 12000 திரைகளில் பான் இந்திய அளவில் வெளியாகிறது.
படம் வெளியாகுவதற்கு முன்பே, 100 கோடி வசூலை டிக்கெட் முன்பதிவில் எட்டியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் சென்சார் குழுவை சேர்ந்த உமைர் சந்து படத்தை பார்த்த பின்பு,தன்னுடைய X தள பதிவில் அவருடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“புஷ்பா 2 ஒரு பக்கா வணிகப்படமாக உருவாகியுள்ளது. மாஸ் மற்றும் கிளாஸ் விரும்பும் ரசிகர்களுக்கு சமமாக இப்படம் மகிழ்ச்சி அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
அல்லு அர்ஜுனின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்கும் அளவுக்கு மாஸாக உள்ளதுடன், அவரது காமெடியும்,இப்படத்தின் பலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
ராஷ்மிகா மந்தனா-வின் நடிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியமான ரோலாக அமைகிறது என பதிவிட்டுள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இடைவேளை காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்தும் எனவும்,புஷ்பா 3 குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் எனத் தெரிவித்துள்ளார். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மட்டுமே கொஞ்சம் குறையாக உள்ளது என தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்..
முதல் நாளில் மட்டும் உலகளவில் 250 கோடி வசூலிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், வாழ்நாள் வசூலாக 1000 கோடி வரையிலும் வசூலிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.