பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல், இந்திய சினிமாவின் மிக பிரமாண்ட திரைப்படங்களில் ஒன்றாக,நாளை சுமார் 12000 திரைகளில் பான் இந்திய அளவில் வெளியாகிறது.
படம் வெளியாகுவதற்கு முன்பே, 100 கோடி வசூலை டிக்கெட் முன்பதிவில் எட்டியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் சென்சார் குழுவை சேர்ந்த உமைர் சந்து படத்தை பார்த்த பின்பு,தன்னுடைய X தள பதிவில் அவருடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“புஷ்பா 2 ஒரு பக்கா வணிகப்படமாக உருவாகியுள்ளது. மாஸ் மற்றும் கிளாஸ் விரும்பும் ரசிகர்களுக்கு சமமாக இப்படம் மகிழ்ச்சி அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
அல்லு அர்ஜுனின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்கும் அளவுக்கு மாஸாக உள்ளதுடன், அவரது காமெடியும்,இப்படத்தின் பலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
ராஷ்மிகா மந்தனா-வின் நடிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியமான ரோலாக அமைகிறது என பதிவிட்டுள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இடைவேளை காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்தும் எனவும்,புஷ்பா 3 குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் எனத் தெரிவித்துள்ளார். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மட்டுமே கொஞ்சம் குறையாக உள்ளது என தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்..
முதல் நாளில் மட்டும் உலகளவில் 250 கோடி வசூலிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், வாழ்நாள் வசூலாக 1000 கோடி வரையிலும் வசூலிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.