மைத்ரி மூவீஸ் தயாரிப்பில், சுகுமாறன் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான “புஷ்பா” திரைப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டாலும், தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் வெளியானது. படம் இந்தியா முழுவதும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் கதை முடிவில் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் சேர்க்கப்பட்டதால், ரசிகர்கள் செம த்ரில் அனுபவத்துடன் திரையரங்குகளை விட்டு வெளியேறினர்.
“புஷ்பா 2” திரைப்படம் வரும் டிசம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, மற்றும் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான படம் தொடர்பான ட்ரெய்லர், மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், “புஷ்பா” தொடரின் மூன்றாவது பாகம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலீசுக்கு முன்பே “புஷ்பா 2” ரூ.1,086 கோடிகளுக்கும் அதிகமான வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரை எந்த இந்திய திரைப்படமும் வெளியீட்டுக்கு முன் இத்தனை அளவு வருவாய் ஈட்டியதில்லை. இந்த சாதனை இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா: ரூ.220 கோடி
வட இந்தியா : ரூ.200 கோடி
தமிழ்நாடு : ரூ.50 கோடி
கர்நாடகா : ரூ.30 கோடி
கேரளா : ரூ.20 கோடி
வெளிநாடு : ரூ.140 கோடி
மொத்தம் : ரூ.660 கோடி
ஓடிடி உரிமம் : நெட்பிளிக்ஸ் ரூ.275 கோடிக்கு வாங்கியது.
ரூ.84 கோடி
மியூசிக் உரிமம்:
ரூ.67 கோடி
மொத்த வருவாய்:
ரிலீசுக்கு முன்பே ரூ.1,086 கோடிகளை தாண்டியதால், படக்குழு பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.
அல்லு அர்ஜுனின் சம்பளம்:
புஷ்பா 2 படத்துக்காக அல்லு அர்ஜுன் ரூ.300 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அவர் அடுத்த படங்களில் மேலும் அதிக சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றியின் எதிர்பார்ப்பு:
ரிலீசுக்குப் பிறகு “புஷ்பா 2” பல மடங்கு வசூல் செய்யும் என படக்குழுவும், ரசிகர்களும் உறுதியாக நம்புகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.