மைத்ரி மூவீஸ் தயாரிப்பில், சுகுமாறன் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான “புஷ்பா” திரைப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டாலும், தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் வெளியானது. படம் இந்தியா முழுவதும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் கதை முடிவில் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் சேர்க்கப்பட்டதால், ரசிகர்கள் செம த்ரில் அனுபவத்துடன் திரையரங்குகளை விட்டு வெளியேறினர்.
“புஷ்பா 2” திரைப்படம் வரும் டிசம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, மற்றும் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான படம் தொடர்பான ட்ரெய்லர், மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், “புஷ்பா” தொடரின் மூன்றாவது பாகம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலீசுக்கு முன்பே “புஷ்பா 2” ரூ.1,086 கோடிகளுக்கும் அதிகமான வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரை எந்த இந்திய திரைப்படமும் வெளியீட்டுக்கு முன் இத்தனை அளவு வருவாய் ஈட்டியதில்லை. இந்த சாதனை இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா: ரூ.220 கோடி
வட இந்தியா : ரூ.200 கோடி
தமிழ்நாடு : ரூ.50 கோடி
கர்நாடகா : ரூ.30 கோடி
கேரளா : ரூ.20 கோடி
வெளிநாடு : ரூ.140 கோடி
மொத்தம் : ரூ.660 கோடி
ஓடிடி உரிமம் : நெட்பிளிக்ஸ் ரூ.275 கோடிக்கு வாங்கியது.
ரூ.84 கோடி
மியூசிக் உரிமம்:
ரூ.67 கோடி
மொத்த வருவாய்:
ரிலீசுக்கு முன்பே ரூ.1,086 கோடிகளை தாண்டியதால், படக்குழு பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.
அல்லு அர்ஜுனின் சம்பளம்:
புஷ்பா 2 படத்துக்காக அல்லு அர்ஜுன் ரூ.300 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அவர் அடுத்த படங்களில் மேலும் அதிக சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றியின் எதிர்பார்ப்பு:
ரிலீசுக்குப் பிறகு “புஷ்பா 2” பல மடங்கு வசூல் செய்யும் என படக்குழுவும், ரசிகர்களும் உறுதியாக நம்புகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.