குடிப்பழக்கத்தால் கெட்டு குட்டி சுவர் ஆனேன்… “ஜெயிலர்” மேடையில் அவமானப்பட்ட ரஜினி!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் படம் குறித்தும், இயக்குனர் நெல்சன் குறித்தும் பேசியிருந்ததை முந்தைய செய்திகளில் பார்த்திருப்போம்.

அந்தவகையில் தற்போது தன் ரசிகர்களுக்கு ரஜினி ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார். அதாவது, உடலை கெடுக்கும் எந்த தீய பழகத்திலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள். நான் குடித்து எனக்கு நானே சூன்யம் வைத்துக்கொண்டேன். ஒருவேளை நான் குடிக்கும் பழக்கம் இல்லாதவனாக இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன். எனவே குடிக்கவேண்டாம் குடிப்பழக்கம் உங்களுடைய அம்மா, பொண்டாட்டி, குடும்பத்தில் இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தும் என பேசினார்.

இது போன்று ரஜினி ஏற்கனவே பேட்டி ஒன்றில், எனக்கு ஆரம்ப காலத்தில் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், பாக்கெட் கணக்கில் சிக்ரெட் பிடிப்பேன் இதெல்லாம் என்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்தது. பின்னர் பல படங்களில் ஸ்டைலுக்காகவே சிக்ரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பேன் அதையெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் ரசித்தார்கள்.

ஆனால், அந்த அத்தனை கெட்ட பழக்கங்ககளில் இருந்தும் என்னை மீட்டெடுத்துவர் என்னுடைய மனைவி லதா தான், என் மனைவியின் அன்பாலும், நல்ல மருத்துவர்களின் சிகிச்சையாலும் தான் இன்று நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனவே தன்னை லதாவிடம் அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்றுவரை நன்றி சொல்கிறேன் என ரஜினிகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. .

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.