வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் தற்போது, சின்னத்திரை நடிகர்களுக்கு மவுசு ஜாஸ்தி தான் அந்த வகையில், வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
இவர் முன்னதாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, கணவருடன் ஒன்று சேர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில், தினேஷ் சில தினங்களாக தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மேலும் தன்னை தொடர்பு கொண்டு மிரட்டி வருவதாகவும் ரச்சிதா மகாலட்சுமி பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் ஆஜரான தினேஷ் விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு போகலாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளாராம். இது குறித்து கண்ணாடி துகள்கள் உடைந்தபடி இருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ரச்சிதா மகாலட்சுமி பகிர்ந்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.