2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக சின்னதிரையில் அறிமுகமானவர் ரக்ஷிதா. இவர் அதே சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரையே 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரக்ஷிதா.
பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர். தொடர்ந்து, தற்போது, கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலில் ரக்ஷிதா நடித்து இருந்தார்.
மேலும் படிக்க: டபுள் மீனிங் படங்கள்.. இது தப்பாச்சே.. சென்சார் போர்டை அதிர வைத்த காட்சிகள்..!
திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ரக்ஷிதா தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், 60 வயதை தாண்டிய நடிகர் ஜெகதீசுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். இதனிடையே, தினேஷை ரக்ஷிதா மகாலட்சுமி பெரிய முக்கிய காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, தான் நடிப்பின் மூலம் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் கணவர் வீட்டாருடன் கொடுக்க வேண்டும் என்றும், அவர் அம்மாவிற்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.
மேலும் படிக்க: தலைவர் 171 ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..!
பொருளாதார ரீதியில் தன்னை பெற்ற தாய்க்கு உதவ கூடாது என்று தினேஷ் கூறி வந்ததாகவும், இதனால் ரக்ஷிதா மனம் உடைந்து கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தாராம். ரக்ஷிதா மகாலட்சுமியை பிரியாமல் இருக்க தினேஷ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அப்படி இருந்தும் இருவருக்கும் இடையே விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. எப்படியாவது, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்தால் தினேஷ் செய்யாத தவறை கூறி காவல் நிலையத்தில் ரக்ஷிதா புகாரையும் கொடுத்துப் பார்த்தார்.
இதன் பின்னர் அவரை விட்டு பிரிய எனக்கு சம்மதம் என விவாகரத்திற்கு தினேஷும் விண்ணப்பிக்கலாம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இதை எல்லாம் துளி கூட கண்டுக்காமல் இணையதளத்தில் ரக்ஷிதா தற்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.