2018 ஆம் ஆண்டு வைரமுத்து மீது “Me Too” புகாரை எழுப்பினார் சின்மயி. அதனை தொடர்ந்து வைரமுத்துவுக்கு திரைப்பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லாமலே போனது. மறுபக்கம் சின்மயி டப்பிங் யூனியனில் தடை செய்யப்பட்டார். அவர் சந்தா ஒழுங்காக கட்டவில்லை என்ற காரணத்தினால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என அந்த சமயத்தில் டப்பிங் யூனியன் தலைவராக இருந்த ராதா ரவி கூறினார்.
அதுவரை பல நடிகைகளுக்கு பல திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்துவந்த நிலையில், அத்தடையை தொடர்ந்து சின்மயி தமிழில் பின்னணி குரல் கொடுப்பதும் நின்றுப்போனது. எனினும் நடுவில் “லியோ” திரைப்படத்தில் திரிஷாவிற்கு சின்மயியை பின்னணி குரல் கொடுக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ்.
மேலும் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு சின்மயி தமிழ் திரைப்பாடல்கள் பாடுவதற்கும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்மயி, “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் “முத்த மழை” பாடலை பாடியது அனைவரையும் கவர்ந்தது. ரசிகர்கள் பலரும், “சின்மயிக்கு போடப்பட்டிருக்கும் தடையை நீக்கவேண்டும்” என சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சின்மயி பாடுவதற்கு தடை போட்டது நடிகர் ராதா ரவிதான் என்று கூறப்பட்ட நிலையில் அவரையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவியிடம் சின்மயி பாடுவதற்கு தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதா ரவி, “சின்மயி பாடுவதற்கு தடை விதித்தது நான் அல்ல. நான் டப்பிங் யூனியனுக்கு மட்டுமே தலைவராக இருந்தேன். சின்மயி பாடுவதற்கு தடை விதித்தவர்கள் மியூசிக் யூனியன்தான்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “டப்பிங் யூனியனுக்கும் மியூசிக் யூனியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டப்பிங் யூனியன் வேறு மியூசிக் யூனியன் வேறு என்பது கூட தெரியாமல் சிலர் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் என்ன பதில் சொல்வது? சின்மயி பாடுவதற்கு தடை போடப்பட்டிருந்தால் அது ஏன் என்று மியூசிக் யூனியனிடம்தான் கேட்க வேண்டும்” எனவும் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.