டான்ஸ் மாஸ்டரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவற்றோருக்கும் மற்றும் பல திருநங்ககைகளுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இவரது செயல் மிகவும் கவனிக்கத்தக்க செயலாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அவர் செய்யவுள்ள ஒரு நிதியுதவி ரசிகர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது ரயிலில் போளி விற்கும் 80 வயது முதியவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “சென்னையில் 80 வயடு முதியவரும் அவரது மனைவியும் இனிப்புகள் மற்றும் போளி தயாரித்து ரயில்களில் விற்று வருவதை பற்றிய ஒரு பதிவு சமூக ஊடகங்களின் மூலம் இன்று எனக்கு கிடைக்கப்பெற்றது. அவர்களின் மன உறுதி என்னை மிகவும் நெகிழ வைத்தது.
அவர்களை ஆதரிக்க ஒரு லட்சம் பங்களிக்க நான் தயாராக இருக்கிறேன். அது அவர்களுக்கு ஆறுதலையும் பலத்தையும் தரும் என நம்புகிறேன். அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. யாருக்காவது அவர்களின் விவரங்கள் தெரிந்தால் தயவு செய்து என்னை தொடர்புகொள்ளவும். நீங்கள் அவர்களை ரயிலில் பார்க்க நேர்ந்தால் அவர்களிடம் இனிப்புகள் வாங்கி உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும்” என கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இச்செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.