பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் உலக அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் இன்று வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு வந்து இருந்தனர்.
அப்போது பத்திரிகையாளர்கள் அனைவரும் ராஜமவுலியிடம் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்த ராஜமௌலி தன்னுடைய அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு கருத்தையும் சூசகமாக வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கு தமிழ் நடிகர்களை வைத்து பிரமாண்டமாக படம் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது.
அதுவும் ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒன்றிணைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது அவரின் தீராத ஆசை என்றார். அந்த கதையில் கமல் வில்லனாகவும் ரஜினி ஹீரோவாகவும் வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே இதில் இன்னும் சுவாரசியம்.
தமிழில் பல முன்னணி நடிகர்களும் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது ராஜமௌலி ரஜினி, கமலுடன் இணையவேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார். கூடிய விரைவில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.