தப்பு பண்ணிட்டேன்…. ஜெயிலர் வில்லனிடம் மன்னிப்புக்கேட்ட ரஜினிகாந்த் – ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. காவாலா, டைகர் ஹுக்கும் பாடல்கள் மற்றும ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெரிதும் தூண்டியுள்ளது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விஜய் வசந்த், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்து பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. நாளை ரிலீஸை வைத்துக்கொண்டு ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதற்கு காரணம் படம் எதிர்பார்த்தது போன்று வரவில்லை எனவும் இது ஒர்க்அவுட் ஆகாது என்றும் அப்செட் ஆகிவிட்டாராம். மேலும் முழு படத்தை பார்த்த ரஜினி படம் குறித்து எதுவுமே சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாராம். உடனடியாக அமைதி பயணமாக இமயமலைக்கு சென்றுவிட்டார் என செய்திகள் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் ரஜினி மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி தன்னுடைய ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினாராம். ரஜினி காட்சி படமாக்கி முடித்த பின்னர் ஜாக்கி ஷெராப் காட்சி படமாக்க படக்குழு தயாராகிக்கொண்டிருந்த நேரம் அது.

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த ரஜினி ஷாக்கி ஷெராப்பிடம் ” மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் சொல்லாமலே கிளம்பிட்டேன். வேண்டுமென்றால் உங்களுக்காக இருக்கிறேன் என சொன்னராம்.” இதனை பேட்டி ஒன்றில் ஷாக்கி ஷெராப் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ரஜினி எனது நீண்ட நாள் நண்பர். அவர் எனக்கு பல வருடத்திற்கு முன்னிருந்தே பழக்கம். என்னுடைய திருமணத்தில் கலந்துக்கொண்ட வெகு சிலரில் ஒருவர் ரஜினி. அதை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். இந்த பட வாய்ப்பு கிடைத்ததும் ரஜினிக்காக மறுக்கவே முடியவில்லை. அதனால் ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

உன் மேல ஆசை.. உல்லாசமா இருக்கலாமா? புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!

பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…

22 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

ஆப்ரேஷன் சிந்தூர்  பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்…25 நிமிடங்களில் பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா… என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…

1 hour ago

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

18 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

18 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

19 hours ago

This website uses cookies.