சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருவண்ணாம மும்பை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் ரோலில் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் சொன்ன அந்த காக்கா கழுகு கதை விஜய்க்கு தான் கூறுகிறார் என விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் அது குறித்து தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். “ரொம்ப வருத்தமா இருக்கு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன அந்த காக்கா கழுகு கதையை அப்படியே வேற மாதிரி.. நான் விஜய்க்கு சொன்ன மாதிரி சோசியல் மீடியால இம்பேக்ட் பண்ணாங்க அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
விஜய் எனக்கு போட்டின்னு சொன்னா எனக்கு மரியாதை இல்லை, எனக்கு கௌரவம் இல்லை. அதேபோல அவருக்கும் அது மரியாதை இல்லை. தயவுசெஞ்சு காக்கா கழுதை கதையெல்லாம் விடுங்க…ரெண்டு பேரின் ரசிகர்களும் இதுபோல் பண்ணாதீங்க.. இது என் அன்பான வேண்டுகோள் ரொம்ப நன்றி” என ரஜினிகாந்த் விளக்கத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.