தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தற்போது ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு லால் சலாம் மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த என் டி ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து பெருமையாக அதே நேரத்தில் லைட்டா கொஞ்சம் பொறாமையோடு பேசியுள்ளது. அதாவது, நடிகர் பாலகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகர்,
கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார்.
சண்டை காட்சிகளில் அவர் ஜீப்பை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும். அதையே நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.