விஜயகாந்த் உண்மையாகவே ஒரு கேப்டன்.. அஞ்சலி செலுத்திய பிறகு நா தழுதழுக்க பேசிய ரஜினி..!

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது.

இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் அலைமோதியது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் இன்று கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, விஜயகாந்த்தின் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பிற்பகல் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி கோயம்பேடு வந்தடைய இருக்கிறது.

இந்நிலையில், தனது திரையுலக நண்பரான விஜயகாந்தின் உடலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதன்பின் பேட்டி அளித்த ரஜினிகாந்த் ஒருமுறை பழகினால் விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை. விஜயகாந்த் அனைவர் மீதும் கோபப்படுவார் நண்பர்கள் மீது, உறவினர்கள் மீது, மக்கள் மீது கூட ஆனால், அவர் மீது யாரும் கோபப்பட மாட்டார்கள். விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர்.

ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் உடம்பு சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அப்போது, ரசிகர்கள் ஹாஸ்பிடல் முழுவதும் சூழ்ந்து கொண்டு பெரிய கூட்டம் கூட்டினாங்க என்ன செய்யறதுன்னு என் குடும்பத்துக்கு தெரியல, அங்கே வந்த விஜயகாந்த் என்ன பண்ணுவார், ஒரு செகண்ட்ல மொத்த கூட்டத்தையும் விரட்டி அடித்துவிட்டார்.

இங்கே பக்கத்தில் எனக்கும் ஒரு ரூம் போடுங்க நான் பார்த்துக்கிறேன் என சொன்னவர் விஜயகாந்த். அவர் உண்மையாகவே ஒரு கேப்டன் தான் எத்தனை ரன்கள் அடிக்க முடியும் சினிமாவிலும் அரசியலும் அவர் அடித்து சாதனை புரிந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ரஜினிகாந்த் நா தழுதழுக்க உருக்கமாக பேசினார்.

Poorni

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

7 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

7 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

7 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

8 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

8 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

9 hours ago

This website uses cookies.