80 முதற்கொண்டு தற்போது வரை சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பும், ஸ்டெயிலுக்கும் மயங்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அண்மையில் வெளியான அண்ணாத்த கலவையான விமர்சனங்களை கொண்டிருந்தாலும், வசூலை அள்ளி விட்டது.
தற்போது, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் கவுரவ தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார். அதோடு, இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் கமிட் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில், 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியான ரஜினியின் அருணாச்சலம் படம் குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரகுவரன், ரம்பா, சௌந்தர்யா என பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார்.
‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ எனும் டயலாக் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம், திரையரங்கில் 175 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை இந்தப் படத்தின் மூலம் ஒட்டு மொத்தமாக 32 கோடிக்கு மேல் வசூலானதாக சொல்லப்படுகிறது.
மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்திற்கு முதலில் குபேரன் என்று தான் சுந்தர் சி பெயர் வைத்துள்ளார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக படத்தின் டைட்டில் வெளியே கசிந்து விட்டால், வேறு தலைப்பை வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், சுந்தர் சியை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், படத்திற்கு நல்ல தலைப்பை தேர்வு செய்து வைத்துள்ளேன் எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது, ரஜினியை சந்திக்க நேரில் சென்ற சுந்தர் சியிடம் ரஜினியின் நண்பர் ஒருவர், படத்திற்கு சூப்பர் டைட்டில் சார் என்று கூறினார். இதனைக் கேட்டு, என்ன டைட்டில் எனக் கேட்ட சுந்தர் சியிடம், அருணாச்சலம் என்று சொல்லியுள்ளார். உடனே அவர், என்ன ‘அருணாச்சலம், வேதாச்சலம்,’ நல்லாவே இல்லை என்று சொல்லி ரஜினியை சந்தித்துள்ளார்.
அப்போது, ரஜினியும் இதே டைட்டிலை சொல்லியுள்ளார். அதுவும் அவருடைய ஸ்டெயிலில் சொன்னவுடன் சுந்தர் சிக்கு டைட்டில் மிகவும் பிடித்து விட்டது. உடனே செய்தியாளர்களை சந்தித்து படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்களாம்.
அண்ணாமலை படம் வெளியாகி நேற்றோடு 26 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.