சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லன்ச் விழா நடைபெற்றது.
அந்த விழாவில், ரஜினிகாந்த் ஜெயிலர் படம் குறித்தும், நெல்சன் குறித்தும் பல விஷயங்களை பேசினார். மேலும், குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பற்றி பேசினார். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.Hukum பாடலில் இருந்து சூப்பர்ஸ்டார் என்பதை மட்டும் எடுக்க சொன்னேன் என ரஜினி பேசிக்கொண்டிருந்தபோதே ரம்யா கிருஷ்ணன் திடீரென மேடைக்கு வந்து மைக் வாங்கி “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்… கூடவே பொறந்தது எங்கேயும் போகாது” என பேச அந்த அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.
இதனை கேட்டு ஒரு செகண்டல நீலாம்பரியே வந்துட்டாங்க என ரசிகர்கள் கூறினார்கள். அதன் பின்னர் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், 24 வருஷத்திற்கு பின்னர் ரம்யா கிருஷ்ணனுடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் ஒரு காட்சியில் ” ரம்யா கிருஷ்ணனிடம் ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு பக்கத்தில் இருக்கும் மருமகளிடம் ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கனும் அது எனக்கு உடனே வரவில்லை.
அந்த காட்சியில் நடிக்க நான் கிட்டத்தட்ட 8 டேக் எடுத்தேன். நீலாம்பரி முன்னாலே இந்த படையப்பா மானமே போச்சு என்று நான் அங்கிருந்தவர்களிடம் சொல்லி சிரிச்சிச்சேன் என அதனை மேடையில் கூறினார். ஒரு சூப்பர் ஸ்டார் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இப்படி உண்மையை வெளிப்படையா சொல்லுறாரே என எல்லோரும் வியந்து ரஜினியை பாராட்டி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.